அண்மைய செய்திகள்

recent
-

கவிஞர் ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைது

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து இன்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டு, வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகண  தெரிவித்தார்.
 
மாங்குளத்திலுள்ள தனது தாயாரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோதே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
வீசா ஒழுங்குமுறையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அஜித் ரோகண மேலும் தெரிவித்தார்.
கவிஞர் ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைது Reviewed by NEWMANNAR on November 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.