அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்தில் ஆளுநரின் ஆட்சி அதிகார தோரணையில் நடக்கின்றது : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

வடக்கில் தற்­பொ­ழுது உள்ள நிலையைப் பார்க்­கும்­பொ­ழுது விரை­வான அர­சியல் தீர்வு ஒன்று எட்­டப்­ப­டா­விடின் தமிழ் பேசும் மக்­க­ளுக்குப் பதில் சிங்­களம் பேசும் மக்­களே அதி­க­ரித்­து­வி­டு­வார்கள். இங்கு ஆளு­நரின் ஆட்சி, ஆக்­கி­ர­மித்த ஒரு இரா­ணு­வத்தின் அதி­கார வேகத்தில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது எனச் சுட்­டிக்­காட்­டிய வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னே ஸ்­வரன், கிடைக்­கின்ற நிதியை ஒவ்­வொரு மாவ ட்­டத்தின் தேவைகளையும் அறிந்து அம்மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்த நடவடிக் கைகளை எடுக்க உத்தேசித்துள்ளோம் எனவும் இவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த அர­சாங்கம் தடை­யாக இருக்­காது என நம்­பு­கின்றோம் எனவும் தெரி­வித்தார்.


வடக்கு மாகாண சபையின் மூன்­றா­வது அமர்வு நேற்று கைத­டியில் உள்ள வட­மா­காண சபையின் பேரவை செய­ல­கத்தில் நடை­பெற்­ற­போது சபையின் 2014 ஆம் ஆண்­டிற்­கான நிதி ஒதுக்­கிடல் நியதிச் சட்­டத்தின் வரு­டாந்த நிதி சம்­பந்­த­மான மதிப்­பீட்டு அறிக்­கையை சபையில் சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

சிறு­பான்­மை­யி­னரின் போராட்டம் கார­ண­மாக மாகாண சபை நிறு­வப்­பட்­டது என்­பது எங்கள் எல்­லோ­ருக்கும் தெரிந்த ஒரு விடயம். முக்­கி­ய­மாக வட, கிழக்கு தமிழ் பேசும் மக்­களின் நலன்­க­ரு­தியே மாகாண சபை திட்­டத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் இந்­தியா பேசி அதன் கார­ண­மாக அர­சியல் யாப்பில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

ஆனால் மாகாண சபை சட்­டத்தை அன்­றைய அர­சாங்கம் நாடு­மு­ழு­வதும் ஏற்­பு­டை­ய­தாக்கி வட­இகி­ழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அளிக்­க­வேண்­டிய அதி­கா­ரப்­ப­ரவல் என்ற கொள்கை ரீதி­யான அதி­கா­ரத்தை கொச்­சைப்­ப­டுத்­தி­விட்­டது. வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளுக்கு விசே­ட­மாக எது­வுமே கொடுக்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்குத் தேவை­யான அதி­காரப் பர­வ­லாக்­கமும் விசே­ட­மாக கவ­னத்­திற்கு எடுக்­கப்­ப­டவும் இல்லை. அம் மாகா­ணங்­களில் வாழும் மக்கள் எதிர்­பார்த்த மாற்­றங்கள்இ திருத்­தங்கள்இ நலன்கள் போன்ற எவை­யுமே கருத்­திற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மாகாண சபை முறை­யா­னது அதி­காரப் பகிர்­விற்­கான ஒரு திட்டம் என எல்­லோ­ராலும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வந்த போதிலும் அது உண்­மையில் நிறை­வேற்று அதி­காரம் உள்ள ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை மென்­மேலும் பலப்­ப­டுத்­து­வ­தா­கவும் விரி­வு­ப­டுத்­து­வ­தா­க­வுமே அமைந்­துள்­ளது.

ஆளுநர் ஜனா­தி­ப­தியின் பிர­தி­நிதி, ஆளு­நரின் நிய­மனம் இன்றி எந்­த­வொரு நிய­ம­னமும் நடை­பெற முடி­யாது. செய­லா­ளர்கள் தொடக்கம் கீழ் மட்டம் வரையில் அவரின் ஊடா­கவே நிய­ம­னங்கள் நடை­பெ­று­கின்­றன. பிர­தம செய­லாளர் ஜனா­தி­ப­தியால் முத­ல­மைச்­சரின் அனு­ச­ர­ணை­யுடன் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று சட்­டத்தில் இருப்­பினும் எமது தேர்தல் தெரிவின் அடிப்­ப­டையில் எவரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. மற்­றைய செய­லா­ளர்­களும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அதை­விட ஆளு­நரின் ஆட்சி ஆக்­கி­ர­மித்த இரா­ணு­வத்தின் அதி­கார வேகத்தில் நடை­பெற்­று­கொண்­டி­ருக்­கி­றது.

எந்த ஒரு மாகா­ண­சபை அலு­வ­லரும் மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சபை உறுப்­பி­ன­ருடன் சேர்ந்து கூட்­டு­ற­வாக இயங்கத் தயங்­கு­கின்­றார்கள். எங்கே முன்­னைய போர்க்­கால இரா­ணுவ அதி­கா­ரியும் இன்­றைய ஆளு­ந­ரு­மா­கிய ஒரு­வரின் கோபத்­திற்கு ஆளா­கி­வி­டு­வோமோ என்ற பயம் அவர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றது. அதை­விட எமது நியதி சட்­டங்­களை உரி­ய­வாறு உரு­வாக்கி எமது மன்­றுக்கு சமர்ப்­பிக்கக் கூடிய நிர்­வாக அலு­வ­லர்கள் எம்­மத்­தியில் இல்­லையோ என்று ஏங்க வேண்­டி­யுள்­ளது.

காலத்தின் கட்­டா­யத்தால் கதிரை மாறி கதி­ரையில் சிரேஷ்ட நிலை அடைந்­துள்ள அலு­வ­லர்கள் பல­ரி­டமும் இருந்து அதி­கா­ரத்­திற்­க­மைய எதிர்­பார்க்க முடி­யாது உள்­ளது. உரி­ய­வர்­களைஇ திறமை மிக்­க­வர்­களை வெளியில் இருந்து கொண்­டு­வர உரிய ஏற்­பா­டுகள் நிலை நிறுத்­தப்­ப­ட­வில்லை. 20 வருட இரா­ணுவ ஆட்சி மேலிடம் சொல்­வதைச் செய்யும் கிளிப்­பிள்­ளை­க­ளாக எமது அலு­வ­லர்­களை ஆக்­கி­யுள்­ளதை கண்­கூ­டாக பார்க்க முடி­கின்­றது. அதற்­காக அவர்­களை நான் கடிந்­து­கொள்­ள­வில்லை. கவ­லைப்­ப­டு­கின்றேன்.

ஆட்சித் திறனில் அபி­வி­ருத்திப் பணியில் உள்­ளேயும் புறத்­தேயும் பாரிய இடை­வெளி காணப்­ப­டு­கின்­றது. இந்த தரு­ணத்தில் யாரா­வது ஒருவர் கேட்கக் கூடும் மாகாண சபைக்கு உரித்­துக்கள் போதாமல் இருந்தும் ஏன் நீங்கள் தேர்­தலில் நிற்­கின்­றீர்கள் என்று?. இதற்கு இரண்டு முக்­கிய கார­ணங்கள் உள்­ளன. ஒன்று தேர்­தலில் நின்றால் தான் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள்இ அபி­லா­சைகள் போன்­ற­வற்றைத் தெரிந்து கொள்­ளலாம். கடந்த தேர்­தலில் எம் மக்­களின் உளப்­பாங்­கினை உல­க­றிய உரகக் கூறி­யுள்­ளது இத் தேர்தல் முடி­வே­யாகும்.
இரண்­டா­வதுஇ பதி­வில்­லாமல்இ மக்­களின் செல்­வாக்கு இல்­லாமல் 13ஆவது திருத்தச் சட்டம் போது­மா­ன­தல்ல என்று எவ்­வ­ள­வுதான் கருத்­த­ரங்­கு­களில் கூறி­னாலும் அது எடு­ப­டாது. மக்கள் செல்­வாக்­குடன் அந்தப் பத­வியில் இருந்து இடை­யூ­று­களை அனு­ப­வித்த பின் நாம் கூறி­னோ­மானால் அதை உலகம் கேட்கும். அதைத் தான் தாங்கள் இப்­பொ­ழுது செய்து வரு­கின்றோம்.

வெறு­மனே 13ஆவது திருத்தச் சட்டம் போது­மா­ன­தாக இல்லை என கூறு­வ­தையும் பார்க்க நாளாந்தம் எவ்­வாறு அந்த போது அற்ற நிலை நிர்­வா­கத்தில் குறுக்­கி­டு­கி­றது என்­பதை உல­க­றியச் செய்­வது சாலச்­சி­றந்த வழி என்று நாம் கரு­து­கின்றோம்.

2012ஆம் ஆண்டின் ஐக்­கிய நாடுகள் தீர்­மா­னத்தின் முக்­கிய நோக்கம் வட­கி­ழக்கு மாகாண மக்­களின் வாழ்வில் மறு­ம­லர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருந்­தது. ஆனால் அதற்­கேற்ற விதத்தில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­னவா என்­பது சந்­தே­க­ம­ளிக்­கின்­றது. வட­மா­காண சபைத் தேர்தல் இந்­தி­யாவின் நெருக்­கு­தல்­க­ளா­லேயே நடை­பெற்­றது. இரா­ணு­வத்தை வட­மா­கா­ணத்தில் தொடர்ந்து நிலை பெற்­றி­ருக்­க­வைத்­தி­ருப்­பது வட­மா­காண மக்­க­ளி­டத்தில் மறு­ம­லர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐக்­கி­ய­நா­டுகள் செய­லாளர் நாய­கத்­திற்கு ஜனா­தி­பதி கொடுத்த வாக்­கு­று­திகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளன. அண்­மையில் வந்த வெளி­நாட்டுத் தலைவர் அனை­வரும் வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அதி­காரப் பர­வ­லாக்கம் அவ­சியம் என்ற விதத்தில் கருத்­துக்கள் வெளி­யிட்­டுள்­ளார்கள். ஆனால் இப்­பேற்­பட்ட அதி­காரப் பர­வ­லாக்­கத்­திற்கு தற்­போது இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டம் போதி­ய­தாக இருக்­க­மாட்­டாது என்­பது வெள்­ளி­டை­மலை. வேண்­டு­மெனில் மாகாண சபையை இடைக்­கால மாற்று நிர்­வா­க­மாக அமைத்து அடுத்த கட்­டத்­துக்குக் கொண்­டு­போ­கலாம். அர­சியல் ரீதி­யாக தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் நாடு சுதந்­திரம் அடைந்து 65 வரு­டங்கள் ஆகியும் தீர்க்­கப்­ப­ட­வில்லை.

மேலும் மேலும் தமிழ் பேசும் மக்கள் மீது கூடிய அல்லல்­க­ளையும் அசௌ­க­ரி­யங்­க­ளையும் தொடர்ந்து வரும் அர­சாங்­கங்கள் சுமத்தி வரு­கின்­றன.

அடுத்த கட்­ட­மாக நாங்கள் சர்­வ­தேச சமூ­கத்­தையே நம்­ப­வேண்­டி இருக்­கின்­றது. அதுதான் தற்­பொ­ழுது காலத்தின் தேவை­யாக இருக்­கின்­றது போல் தெரி­கின்­றது. சர்­வ­தே­சத்­தினர் கடந்த இரண்டு மூன்று மாதங்­களுள் பல நன்­மை­களை எமக்கு அளிப்­பதாக எமக்கு உறு­தி­மொழி கொடுத்­துள்­ளார்கள். அந்த நன்­மை­யைப்­பெற நாங்கள் உரி­ய­வற்றைச் செய்ய வேண்டும். ஐக்­கிய நாடுகள் சபை தொழில்­நுட்ப உத­விகள் வழங்­கு­வ­தாக 2012 ஆம் ஆண்டில் குறிப்­பிட்­டி­ருந்­தது. அவற்­றைப்­பெற ஆவன செய்ய வேண்டும்.

வெளி­நா­டு­களின் நெருக்­கு­தல்கள் இல்­லா­விடின் அர­சாங்கம் எந்­த­வி­த­மான அதி­காரப் பகிர்­வையும் வழங்­க­மாட்­டாது. எம்மால் மறு­ம­லர்ச்­சிக்­காக வெளி­யார் ­தரும் உத­விகள் எம்மை வந்­த­டைய அர­சாங்கம் முட்­டுக்­கட்­டை­யாக இருக்­காத வகையில் சர்­வ­தேசம் பார்த்­துக்­கொள்ள வேண்டும். வெளி­யார் தரும் உத­வி­களை நேர­டி­யாகப் பெற சர்­வ­தேசம் உரி­ய­ன­வற்றை செய்­து­தர வேண்டும். சில நேரங்­களில் வெளி­நாட்டு நிதி­யு­தவி கொழும்பில் முடக்­கப்­பட்டு விட மாகா­ணத்தில் நடக்கும் செயற்­றிட்­டங்­க­ளுக்கு உரிய நேரத்தில் பணம் வந்து சேராமல் போய்­வி­டு­கின்­றது.

இவை­மட்டும் அல்­லாமல் எமது அலு­வ­லர்­க­ளி­டையே போதிய தொழில் திறனை ஏற்­ப­டுத்த உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும். உதா­ர­ணத்­துக்கு தேவை­யான நியதிச் சட்­டங்­களை தயா­ரிப்­ப­தற்குப் போது­மான அலு­வலர்­கள் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். அத்­துடன் செயற்­றிட்­டங்­களைத் தயா­ரிக்­கக்­கூ­டிய தகை­மை­களைக் கொண்­ட­வர்­க­ளையும் சேர்த்­துக்­கொள்ள வேண்டி இருக்­கின்­றது. இன்­றைய நிலையில் நான் காணப்­பது ஜன­நா­ய­கத்தில் இருந்து நாடு தூரச் சென்று கொண்­டி­ருப்­ப­தை­யே­யாகும். நாடு சமஷ்டி, சுயாட்சி, அதி­காரப் பகிர்வு என்­றெல்லாம் பேச்சில் தொடங்­கி­யுள்ளோம். வட­மா­கா­ணத்தில் நடப்­பவை யாவும் சர்­வா­தி­கா­ரத்­திற்கே வித்­தி­டு­வ­தாகத் தெரி­கின்­றது. குடும்ப ஆட்­சியை ஒரு­வ­ரிடம் இருந்து இன்­னொ­ரு­வ­ரிடம் கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­ற­னவா என்று வாய்­விட்டுக் கேட்க வேண்­டும்போல் உள்­ளது.

இரா­ணு­வத்தை எந்தக் காலத்­திலும் வாபஸ்­பெற மாட்டோம் என்று போர் முடிந்து சுமார் 5 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் கூறு­ப­வர்கள் என்ன மனோ நிலையில் இருக்­கின்­றார்கள் என்­பதை நாங்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். தற்­பொ­ழுது நடை­பெறும் நிகழ்­வு­களைப் பார்க்­கும்­போது மிக விரை­வாக அர­சியல் தீர்­வுகள் காணப்­ப­டா­விட்டால் தமிழ்­பேசும் மக்­க­ளுக்குப் பதில் சிங்­களம் பேசும் மக்­களே வட­மா­கா­ணத்தில் அதி­க­ரித்து விடு­வார்கள். அதனால் என்ன என்று கேட்கும் தமி­ழர்­களை நான் சந்­தித்­துள்ளேன்.

தென்­நாட்டில் பர­வ­லாக இள­மைப்­ப­ரு­வத்தில் குடி­கொண்­டி­ருந்த தமிழ் பேசும் மக்­களை 1958 இலும் 1983 இலும் அதற்கு இடைப்­பட்ட காலத்­திலும் அடித்து விரட்­டிய பின்­னர்தான் வடக்கில் இராணு உத­வி­க­ளுடன் குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இது இனப் படு­கொ­லைக்கு ஒப்­பா­னது என்­பது மேற்­படி தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தெரி­யா­ததோ என்­னவோ. அல்­லது தெரி­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை என்று சுய­நல கார­ணங்­க­ளுக்­காக அவ்­வாறு கூறி நிற்­கின்­றார்­களோ என்றும் நான் அறியேன். வடக்கு கிழக்கு மக்­களில் தமிழ்­பேசும் மக்­களை அடையாளம் காட்­ட­மு­டி­யாத அள­விற்கு எடுத்­துச்­செல்ல நட­வ­டிக்­கைகள் நடை­பெற்று வரு­கின்­றன. விரை­வாக வடகிழக்கில் இப்போதிருக்கும் தமிழ்பேசும் மக்களிடையே அவர்களின் கருத்துக்களை அறிய சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் .மேலும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அசட்டையாக இருந்து வந்தால் தமிழ் பேசும் மக்களின் நிலைமையை மாற்றி அமைக்க முடியாத அளவிற்கு மோசமானதாக இருக்கும் என்பதை எம்மக்களுக்கும் சர்வதேச சமூக த்திற்கும் கூறிவைக்க விரும் புகின்றேன்.

எமக்குக் கிடைக்கப்போகும் நிதியுதவி மிகச் சொற்பம் எனினும் விதைவைக் குடும்பங்கள்இ தனிப் பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்கள், அங்கவீனமுற்றவர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை நல் வாழ்வு பெற பிறநாட்டு உதவிகளுடன் கரைசேர்க்க எண்ணியுள்ளோம். ஒவ் வொரு மாவட்டத் தேவைகளைத் தெரிந்து அந்தந்த மாவட்ட மக்களின் நல்வாழ்விற்காக நடவடிக்கைகள் எடுக்க உத்தேசித்துள்ளோம். பாரிய வேலை த்திட்டங்களையும் வெளிநாட்டு உதவி யுடன் செய்ய எண்ணியுள்ளோம்.

இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்காது என்று நம்புகின்றோம். எம்மக்களின் நல்வாழ்வும் மனச் சந்தோசமும் முழுநாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதை சிங்கள மக்கள் உணர்வார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.
வட மாகாணத்தில் ஆளுநரின் ஆட்சி அதிகார தோரணையில் நடக்கின்றது : முதலமைச்சர் விக்கினேஸ்வரன் Reviewed by NEWMANNAR on December 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.