அண்மைய செய்திகள்

recent
-

ஜனவரி முதல் மீனவர்கள் உயிர்க்காப்பு அங்கிகள் அணிவது கட்டாயம். கடற்றொழில் அமைச்சர் அறிவித்தல்.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மீனவர்கள் அனைவரும் உயிர்க்காப்பு அங்கிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது . மீனவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் . 

மீனவர்கள் இயற்கை அனர்த்தங்களாலும் ஏனைய நேரங்களில் கடலில் அடித்துச் செல்லப்பட்டும் இறக்கின்றனர் . இதற்கிணங்க இவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே உயிர்க்காப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . 

மேலும் , முதலாளிமார்கள் தங்களது படகுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது . எதிர்காலங்களில் கடற்றொழில்களில் ஈடுபடும் படகுகளில் தேவையான உயிர்காப்பு அங்கிகள் இல்லாதவிடத்து குறித்த படகின் அனுமதியும் இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார் .
ஜனவரி முதல் மீனவர்கள் உயிர்க்காப்பு அங்கிகள் அணிவது கட்டாயம். கடற்றொழில் அமைச்சர் அறிவித்தல். Reviewed by NEWMANNAR on December 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.