வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் பேச்சு - மாகாண போக்குவரத்து அமைச்சர்- படங்கள்
வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைதிவு ஆகிய தனியார் பேரூந்து போக்குவரத்து தொடர்பில் அண்மையில்இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பேச்சு நடாத்துவதற்கு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 29-12-2013 மன்னார் நகர சபை ஒன்றுகூடல்மண்டபத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 5 மாவட்டங்களினதும் தனியார் போக்குவரத்து பேரூந்துஉரிமையாளர்களின் சங்கங்களினதும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் ஒன்றிய உறுப்பினர்களுக்குமான விசேடகலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ்வொன்ருகூடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் அவர்களும் வட மாகாணசபை உறுப்பினர்கௌரவ ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டனர்.
சுமார் 5 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் பின்னர் ஜனவரி 31வரை வவுனியாவைச் சேர்ந்த 6பேரூந்துகள் பரந்தன் ஊடாக புதுக்குடியிருப்புக்கு செல்வதற்கு தற்கால அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பான தீர்வு எதிர்வரும் ஜனவரி 31 க்குள் இன்னுமொரு கலந்துரையாடலுடன் எடுக்கப்படும் எனவும் வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் பேச்சு - மாகாண போக்குவரத்து அமைச்சர்- படங்கள்
Reviewed by Author
on
December 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment