வறுமை கோட்டின்கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு –படங்கள்
யுத்தத்தினால் பாதிப்புகுள்ளாகிய வறுமை கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகருணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஒன்று நேற்று மாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விளை சமூக சேவகரும் பிரபல வர்த்தகருமான இருதயநாதன் சாள்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது வறுமை கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு சமூக சேவகரும் பிரபல வர்த்தகருமான இருதயநாதன் சாள்ஸ் அவர்களினால் பாடசாலை உபகருணங்கள வழங்கிவைக்கப்பட்டது.
நெடு நாட்களாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில மீள்குடியோற்ற கிராமங்களில் உள்ள வறிய மாணவர்கள் தமது பாடசாலை கல்வி கற்றலுக்கு தேவையான உபகருணங்களின்றி பல அசவுகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக தெரிந்து கொண்ட சமூக சேவகரும் பிரபல வர்த்தகருமான இருதயநாதன் சாள்ஸ் குறித்த பகுதிகளுக்கு சென்று மாணவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டதுடன் குறித்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சளவக்கை,சன்னார்,பெரிய மடு ஆகிய கிராமங்களை சேர்ந்த வறிய மாணவர்களுக்கு கொப்பிகளை வழங்கிவைத்தார்.
இதன் மூலம் சன்னாரை சேர்ந்த 350 மாணவர்களும்;, ஈச்சளவக்கையை சேர்ந்த 120 மாணவர்களும்; , பெரிய மடுவை சேர்ந்த 30 மாணவர்களும் பயன்னடைந்தள்ளனர்.
இதேவேளை இதேபோன்ற வறிய மாணவர்களுக்கு உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த வருடமும் மூக சேவகரும் பிரபல வர்த்தகருமான இருதயநாதன் சாள்ஸ தலைமையில் பல கிராமங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
வறுமை கோட்டின்கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு –படங்கள்
Reviewed by Author
on
December 30, 2013
Rating:
No comments:
Post a Comment