அண்மைய செய்திகள்

recent
-

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் 'CEYLON” 2014 மார்ச்சில் வெளிவரும்:

இலங்கைப் பற்றி 'CEYLONஎனும் தலைப்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனால் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் படமானது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த படம் இலங்கையை பற்றியதாக இருக்கின்றது என்பதனால் அந்த படத்திற்கு  பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த படத்திற்கு தமிழில் இப்படத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன்,  'தளபதி', 'ரோஜா', 'இருவர', 'ராவணன்' உள்ளிட்ட பல படங்களுக்கு தனது வித்தியாசமான கேமரா கோணம், ஒளி அமைப்புகளால் பெயர் பெற்றவராவார்.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைப்பில் உருவான 'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. ப்ருத்விராஜ் நடித்த 'உருமி' என்ற படத்தினையும் இவரே இயக்கி இருக்கிறார்.

'துப்பாக்கி' வெளியான நேரத்தில் அடுத்ததாக'CEYLONஎன்ற படத்தினை இயக்க இருக்கிறேன்' என்று அறிவித்தார்.
ஒளிப்பதிவாளர்  சந்தோஷ் சிவன் ''CEYLONபடத்தின் FIRST LOOK POSTERI யை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அப்படியே இலங்கையின் வரைப்படத்தினை கொண்டே அப்படத்தின் FIRST LOOKஅமைந்து இருப்பது, படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

படத்தில் வரும் எட்டு இளம் அனாதைகளின் வலியையும், அதே சமயத்தில் நகைச்சுவை சீக்வென்டுகளோடும் ட்ரெயிலர் பக்காவாக வரும் என சுரேஷ் வாக்குறுதி அளித்திருக்கிறார். நண்பர் அரவிந்த்சாமியின் குரல் படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ்' என்றிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் 'CEYLON” 2014 மார்ச்சில் வெளிவரும்: Reviewed by Author on December 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.