மனித புதை குழிகள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம்!– செல்வம் அடைக்கலநாதன்
மனித புதை குழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதை குழியைப் போன்றே மற்றுமொரு மனித புதைகுழி மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் பகுதியில் பாரிய மனித புதைகுழியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மனித புதை குழி தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வன்னி மாவட்ட டிப்போக்களில் காணப்படும் பேரூந்துகள் மிகவும் பழையவை. வன்னி டிப்போவிற்கு புதிய பேரூந்துகள் வழங்கப்பட வேண்டும்.
பழைய பேரூந்துகளை போக்குவரத்துக்கு உகந்த வகையில் பழுதுபார்த்து கொடுக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித புதை குழிகள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம்!– செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by NEWMANNAR
on
January 23, 2014
Rating:
No comments:
Post a Comment