அண்மைய செய்திகள்

recent
-

பக்தி விஜயம் மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.பி.முத்து காலமானார்

மன்னாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் பக்தி விஜயம் மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், சமூக சேவகருமான எஸ்.பி.முத்து அவர்கள் திடீர் மாரடைப்பின் காரணமாக நேற்று சனிக்கிழமை தனது 58 ஆவது வயதில் மரணமானார்.

 மன்னார் உப்புக்குளத்தை வதிவிடமாகக் கொண்ட அவர் பக்தி விஜயம் எனும் மாதந்த சஞ்சிகையினை வெளியிட்டு வந்தார்.

 இம்மாதத்திற்கான சஞ்சிகயினை தயார் படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சென்ற வேளை நேற்று சனிக்கிழமை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையுமாவார்

அன்னார் எமது மன்னார் இணையத்திற்கு சமூகம் சார்ந்த செய்திகளை வழங்கி வந்தார்   என்பதுடன் மிகுந்த சமூக ஈடுபாடு உடையவர் என்பதும் குறிப்பிட தக்கது.

அன்னாரின் குடும்பத்திற்கு எமது இணையத்தின் சார்பாக இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.








பக்தி விஜயம் மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.பி.முத்து காலமானார் Reviewed by Admin on January 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.