இன்றைய விம்பம் பகுதியில் யாழ்-மன்னார் தனியார் பேருந்து சேவையில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்பற்றிய தகவலுடன்
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்குமான தனியார் பஸ் சேவையில் மக்கள் பல அசவுகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தினால் பயணிகள் பெரும் அசவுகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் பேருந்துகளின் வாகன பழுது காரணமாக பல முறை தமது பயணங்கள் தடைப்பட்டுள்ளதாக மன்னார் - யாழ்ப்பாண பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் பல முறை இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக சம்பந்தப்பட்ட பயணிகள் தெரிவிக்கினறனர்.
குறித்த தினத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த பொறியியலாளர் ஒருவர் மன்னார் இணையத்திற்கு கருத்து தெரிவிக்கையில் இது போன்ற சம்பவங்கள் பல முறை நடைபெற்றுள்ளதாக மக்கள் விசனம்தெரிவித்துள்ளதை தான் அறிந்துள்ளதாகவும் குறிப்பாக தான் கடந்த ஒரிரு வாரங்களுக்கு முன்பு மன்னாருக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது குறித்த யாழ் தனியார் பேருந்து நிலையத்திலிருந்து மன்னாருக்கான பயணிகள் சேவையிலீடுபடும் பேருந்து பழுதாகிய நிலையில் தமது பயணத்தினை தொடர்வதற்கு முடியாமல் போனதாக தெரிவித்த அவர் இவ்வாறான சம்பவங்களினால் தாம் மட்டுமன்றி அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்லவிரும்பும் பயணிகளுக்கு பாரிய சவாலாக தனியார் போக்குவரத்து சேவைகள் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தெரிய வருபது நேற்று மலை 3:30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கான போக்குவரத்து சேவையிலிடுபட்டிருந்து தனியார் பேருந்து பழுதாகிய நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்காக பயணிகள் சேவையிலிடுபடும் 4:45 ற்கான பேருந்தினிலேயே குறித்த தினத்தன்று மாலை 4;15 மணியளவில் மக்கள் தமது பயணத்தை தொடரக்கூடியதாக அமைந்தது.
குறிப்பாக யாழ்ப்பாணம் மன்னார் போக்குவரத்து சேவையிலீடுபடும் பேருந்துகளில் மன்னாருக்கான பயணத்தினை மேற்கொள்ள விரும்பும் பயணிகள் தமது ஆசனத்தினை பெற்றுக்கொள்வதற்காக குறித்த பேருந்து சேவை நிலையத்திற்கு நேரத்திற்கு முன்பதாக குறித்த பகுதியிற்கு வந்து தமது ஆசனங்களை பேருந்தில் பிடித்து அமர்ந்து கொள்கிறார்கள்.
இதில் சிலர் மிக வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் ஊள்ளிட்ட குழந்தைகள் குடும்பங்களை சேர்ந்த நபர்கள் குறித்த பேருந்து நிலையத்திற்கு நேரத்திற்கு முன்பாகவே சென்று காத்திருந்து தமது ஆசனங்களை குறித்த பேருந்தில் பிடித்து அமர்ந்து கொள்வது வழமை.
ஆனால் இவ்வாறு பேருந்தில் பழுதுகள் ஏற்படுவதினால் குறித்த பேருந்தில் ஆசனங்களை நேரத்திற்கு வந்து காத்திருந்து பிடிக்காதவர்கள் மற்றும் பிடித்துக் கொண்டவர்களில் இளைய வயதானவர்கள் குறித்த பேருந்திலிருந்து மற்றைய பேருந்திற்கு மாறும் பொழுது மிக இலகுவான முறையில் ஓடி பாய்ந்து தமது ஆசனங்களை பிடித்து கொள்கிறார்கள்.
ஆனால் வயோதிபர்கள் உடப்பட குழந்தைகளுடன் வரும் பெண்கள் அவ்வாறு ஆசனங்களை பெறமுடியாமல் நிர்க்கதியானநிலைக்கு தள்ளப்படுவதோடு ஆசனங்களை இழந்து தமது பயணத்தினை தொடரமுடியாமல் இக்கட்டான நிலையிக்கு தள்ளப்பட்டு; பாதிக்கப்படுகின்றனர் .
குறிப்பாக பேருந்தில் ஆசனங்களை பிடித்தக்கொண்டவர்கள் குறித்த வயோதிபர்களுக்கோ அல்லது இயலவே நேரத்தோடு சென்று ஆசனங்களை பிடித்து அமர்ந்தர்களுக்கோ வழங்குவதில்லை
இதனால் ஆசனங்களை இழந்த வயோதிபர்கள் உட்;பட பயணிகள் பலர் பல அசவுகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலை மாற வேண்டு;ம் குறிப்பாக தனியார் போக்குவரத்து பேருந்துகளில் பல மிகவும் பழமைவாயந்;த பேருந்துகளாகவே காணப்படுகிறது. இவ்வாறான பேருந்துகளை அடையாளம் கண்டு அவற்றை சேவையிலிருந்து நிறுத்தவோ அல்லது குறித்த பேருந்திளை திருத்தம் செய்து பயணிகள் அசவுகரியப்படாத வகையில் பயணங்கனை மேற்கொள்வதற்கு வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
இது ஒரு புறமிருக்க மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டணமாக ஒரு நபருக்கு 190 ரூபா அறவிடப்படுகிறது.
அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாhருக்கான பயணங்களில் ஈடுபடும் பயணிகளிடம் இருந்து 198 ரூபா அறவிடப்படுகிறது.
குறிப்பாக குறித்த 198 ரூபாவிற்கான கட்டணத்திற்கு 200ரூபாய் அல்லது அதற்கு மேற்ப்பட்ட பணம் பயணிகளினால் வழங்கப்படுமானால் 200 ரூபாவிற்கு கட்டணம் வசூலித்துவிட்டு மீதி இரண்டு ரூபாய்க்கு சில்லறை இல்லை என்ற பதில் வருகிறது.
எனவே குறித்த விடயம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட இதற்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் இவ்வாறான மோசடிகள் தொடர்ந்து நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
யாழ்ப்பாணம் மட்டுமல்ல மன்னாரில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு பிரயாணம் செய்யும் பிரயாணிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஏற்கனவே மன்னார் இணையத்துக்கு பாதிக்கப்பட்ட பிரயாணி ஒருவர் அனுப்பி இருந்த ஆதங்க மடலை மீண்டும் இணைக்கின்றோம் .
மன்னார் அரச பேரூந்து சேவையின் ஆசனம்பதிபவரின் அருவருப்புச்செயல்
என்னைப்பற்றிய அதிக அறிமுகங்கள் தவிர்த்து நேரடியாக விடயத்துக்கு வருகிறேன். நான் ஒரு தனியார் பாடசாலை ஆசிரியர். ஓவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் M.ED கற்கை நெறிக்காக கொழும்பு செல்வது வழமை. சரியான நேரத்துக்கு செல்வதற்காகவும் செலவு குறைவு என்பதற்காகவும் நான் அரச பேருந்தையே அதிகமாக நாடுவது வழமை. வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகம் என்பதால் காலையில் 8.15 மணிக்கெல்லாம் ஆசனத்தை பதிவு செய்வது வழமை.
நவம்பர் மாத நடுப்பகுதியில் அரச பேருந்துக்கான கட்டணங்கள் அதிகரித்தது யாவரும் அறிந்த உண்மை. ஆதலால் இரண்டு வாரங்களுக்கு முன் ஆசனப்பதிவுக்கு சென்றிருந்த போது ரூ.500 ஐ கொடுக்க அவ்வதிகாரி ரூ.20 ஐ மிகுதியாகத்தந்தார். ஆனால் பற்றுச்சீட்டைப்பார்த்தபோது ரூ.471 என எழுதப்பட்டு இருந்தது. அச்சமயத்தில் என்னிடமும் சில்லறை இருக்கவில்லை ஆதலால் எதுவும் பேசாமல் வந்து விட்டேன்.
இன்று (2013.12.06) காலை வழமை போல் ஆசனப்பதிவுக்காகச் சென்ற போது கையோடு ரூ.471ஐ எடுத்துச்சென்றேன். ஆசனப்பதிவு முடிந்து பணத்தைக்கொடுத்தபோது அவ்வதிகாரியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆம் அவ்வதிகாரி என்னிடம் கீழ் கண்டவாறு சொன்னார். ' நீங்கள் வந்து காசை மட்டுமட்டாக தருவீங்க, ஆனா நாங்க உங்களுக்கு நீங்க கேட்ட யன்னல் சீற் தரணும். எங்களுக்கு இதுதானா வேலை. ரூபா 480 தான் நாங்க எடுக்கிறது' என்று என்னைப்பார்த்து சரியான தொகை கொடுத்ததுக்காக திட்டத்தொடங்கினார்.
நான் ஆச்சரியத்தில் இருந்து மீண்டுவர அதிக நேரம் எடுத்தது. ஒரு பொறுப்புள்ள அரச அதிகாரியின் செயல் ஆச்சரியத்தையும் தாண்டி அருவருக்கிறது. பற்றுச்சீட்டில் 471ரூபா என எழுதிய பின் 480 ரூபாவை கேட்டுப்பெறுவது எவ்வகையில் நியாயம்? ரூ.9 ஒரு பெரிய தொகை அல்ல மாறாக அவரின் பொறுப்பற்ற பேச்சு அரச பேருந்தின் பொறுப்புக்கள் மேல் வெறுப்பை உண்டு பண்ணுகிறது. பெருமளவில் பெற்றுக்கொள்ளப்படுவது மட்டும் இலஞ்சம் ஆகிவிடாது, இவையும் கூட ஒரு வகையில் இலஞ்சமே ஆகும். (அந்நியன் படத்தில் வரும் ஒரு ரூபா திருடினால் தப்பா என்கிற சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது). என்போல இனியாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதே என் இலக்கு.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பல அரசசேவைகளும் சுதந்திரமடைந்தது ஆனால் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் நாம் அவற்றின் கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளோம். அரச சேவைகளும் , அரச சேவையாளர்களும் மக்களுக்கே என்பதை அனைவரும் மறக்கவும் சரி மறுக்கவும் முடியாது.
நான் அடைந்த துயரத்தை பகிர்ந்து கொள்ளவும், இப்படியும் இங்கெல்லாம் நடக்கிறது என்பதைச் சொல்லவுமே உங்கள் பார்வைக்கு இதை அனுப்பிவைக்கிறேன்.
நன்றி
இங்கணம்
சாதாரண ஒரு பஸ் பிரயாணி
முறைகேடான போக்குவரத்து தொடர்பில் மன்னார் இணையத்துக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமே உள்ளன.
இப் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண போக்கு வரத்து அமைச்சர் நடவடிக்கைஎடுப்பாரா?
மீண்டும் அடுத்த விம்பத்தில் வரும் ஞாயிறு சந்திப்போம் விம்பம் குழு.
இன்றைய விம்பம் பகுதியில் யாழ்-மன்னார் தனியார் பேருந்து சேவையில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்பற்றிய தகவலுடன்
Reviewed by Author
on
January 12, 2014
Rating:

No comments:
Post a Comment