அண்மைய செய்திகள்

recent
-

மன்னார், மாத்­தளை மனிதப் புதை­கு­ழிகள் தொடர்­பாக நீதி­யான விசா­ர­ணை நடத்­தப்­பட வேண்­டு­ம் : வாசு

ஒற்­றை­யாட்­சிக்குள் மாகாண சபைகள் இல்­லாத புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக எனக்கு உடன்­பா­டில்லை. அதனை எதிர்க்­கின்றேன் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். மன்னார், மாத்­தளை மனிதப் புதை­கு­ழிகள் தொடர்­பாக நீதி­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்­டு­மென்றும் அமைச்சர் கூறினார்.


இது தொடர்­பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரு­மைப்­பாடு தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று தேவை என்­பது எனது கொள்­கை­யாகும்.

இவ்­வா­றா­ன­தொரு புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி வலி­யு­றுத்­தப்­ப­டு­வதை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால்,ஒற்­றை­யாட்­சிக்குள் மாகாண சபைகள், அதி­காரப் பர­வ­லாக்கல் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். மாகாண சபைகள் இல்­லாத ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அத்­தோடு ஒற்­றை­யாட்­சிக்குள் நாடு பிரியும் என்ற விவாதம் அர்த்­த­மில்­லா­த­தாகும். இந்­தி­யாவில் இந்த முறை­மைதான் உள்­ளது. அங்கு அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்டு மாநில ஆட்சி நடை­பெ­று­கி­றது.

அங்கு நாடு பிரிந்­ததா, இல்­லையே. மக்கள் அதி­கா­ரங்­க­ளோடு வாழ்­கின்­றனர்.
பெரும்­பான்மை இன சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் மட்­டுமே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வா­கினால் அது வெற்­றி­பெறப் போவ­தில்லை. தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவும் இதற்கு கிடைக்க வேண்டும். இல்­லா­விட்டால் அது நடை­முறை சாத்­தி­ய­மா­காது.

மன்னார்

மன்னார் மட்­டு­மல்­ல­மாது, மாத்­தளை மனிதப் புதை­கு­ழிகள் தொடர்­பா­கவும் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

இது நீதி­யா­னதும், சுயா­தீ­ன­மா­ன­து­மாக நடை­பெற வேண்டும். குற்­ற­வா­ளிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டனை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரிவித்தார்.
மன்னார், மாத்­தளை மனிதப் புதை­கு­ழிகள் தொடர்­பாக நீதி­யான விசா­ர­ணை நடத்­தப்­பட வேண்­டு­ம் : வாசு Reviewed by Admin on January 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.