போதைப் பொருள் விநியோக மத்திய நிலையமாக இலங்கை - திஸ்ஸ

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை போதைப்பொருள் விநியோக மத்திய நிலையம் என, இந்தியாவின் புதுடில்லி பொலிஸார் பெயரிட்டுள்ளதை திஸ்ஸ அத்தநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகள், பொலிஸார் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பது தௌிவாவதாகவும், இளைஞர்களை இவற்றில் இருந்து மீட்க வேண்டுமாயின் போதைப் பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எத்தனோல் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்
ஒரு பௌத்த நாடு போதைப் பொருள் விநியோகத்தின் மத்திய நிலையமாக மாறியுள்ள தென குறிப்பிட்ட அவர், ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
போதைப் பொருள் விநியோக மத்திய நிலையமாக இலங்கை - திஸ்ஸ
Reviewed by Author
on
January 04, 2014
Rating:

No comments:
Post a Comment