அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் - காணாமல்போனோரின் உறவினர்கள் சந்திப்பு

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் தலைமையிலான குழுவினரை யாழிலுள்ள கிறீன்கிறாஸ் விடுதியில் வடமாகாண சபை உறுப்பினரான திருமதி.அனந்தி தலைமையிலான காணாமல் போனோரின் உறவினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.


இச் சந்திப்பு இன்று சனிக்கிழமை யாழ். கிறீன்கிராஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் திருமதி. அனந்தி சசிதரனுடன் காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கத்தின் சார்பில் மூவர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக திருமதி. அனந்தி சசிதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தமிழ் மக்களிடம் நல்லிணக்கத்தினைக் காட்டுவதாக இருந்தால் போர் முடிவடைந்துள்ளது என சர்வதேசத்திற்குச் சொல்லுகின்ற பொழுதாவது சரணடைந்தவர்களையும் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்கவேண்டும். இதுவே நல்லிணக்கமாக அமையும் என அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளரிடம் சுட்டிக்காட்டியிருந்தோம். அத்துடன் காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் தொடர்பாகவும் அவரிடம் எடுத்துக்கூறியுள்ளோம்.

குறிப்பாக போருக்குப் பின்னர் இலங்கையில் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறியுள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில் குறித்த விடயங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பவுள்ளதாகவும் எமக்கு எப்பொழுதும் ஆதரவாக செயற்படுவதாகவும் எங்களிடம் உறுதியளித்துள்ளார் என்றார்.
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் - காணாமல்போனோரின் உறவினர்கள் சந்திப்பு Reviewed by NEWMANNAR on February 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.