மன்னார் நகருக்குள் குடிசை வாசிகளின் அவலம் - படங்கள்
மன்னார் நகரிற்குள் குடிசைகளில் வாழும் மக்களை சந்தித்து அம் மக்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினார் வன்னி மாவட்ட வணிக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதயுதீன்.
இவ்வாறு அநாதரவாக வாழும் இந்த மக்கள் துயர் தொடர்பில் கண்டறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் தமது மக்கள் பிரதி நிதிகள் சகிதம் மன்னார் பெரியக்கடை பகுதிக்கு விஜயம் செய்து அம்மக்களின் இந்த துன்பியல் வாழ்வை பார்வையிட்டார்.
வீடமைப்பு திட்டம் தொடர்பில் தேவையற்ற பிழையான பிரசாரங்களை மேற் கொள்ளும் இனவாத கட்சிகள், அவலத்தடன் வாழும் இந்த மக்கள் தொடர்பில் தமது அனுதாபத்தை தெரிவிக்காது தொடர்ந்தும் காயப்படுத்தும் பணியினையே செய்கின்றனர்.
அடிப்படை வசதிகளற்ற நிலையில் மன்னார் நகருக்குள் வாழும் இந்த வறிய மக்களின் வாழ்க்கையின் வசந்தத்துக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எல்லோரும் ஒத்தாசை புரிவார்களெனில் நல்லதொரு காரியத்தை செய்து முடித்த நிம்மதியோடு எமது பயணத்தை தொடரலாம்.
\
மன்னார் நகருக்குள் குடிசை வாசிகளின் அவலம் - படங்கள்
Reviewed by Author
on
February 22, 2014
Rating:
No comments:
Post a Comment