பருத்தித்துறை கடலில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
யாழ், பருத்தித்துறை கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் இன்று காலை 10.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நண்பர்கள் சிலருடன் கடலில் குளிக்கச் சென்றிருந்தபோதே சிறுவன் கடலில் மூழ்கியிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணை மற்றும் பரிசோதனை என்பன இன்று மாலை இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பருத்தித்துறை கடலில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
February 14, 2014
Rating:

No comments:
Post a Comment