மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியில் முப்பதாவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.
மனித புதைகுழியில் இருந்து இதுவரை 75 இற்கு மேற்பட்ட மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எலும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரம் - மாந்தை வீதியில் கடந்த வருடம் டிசம்பர் 20 ஆம் திகதி நீர்குழாய் பொருத்தும் நடவடிக்கையின் போது இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, திருகோணமலை நகரசபைக் கட்டட வளாகத்தில் அண்மையில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இன்னும் ஒரு வாரத்துக்குள் கிடைக்க கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது
Reviewed by NEWMANNAR
on
February 23, 2014
Rating:

No comments:
Post a Comment