அண்மைய செய்திகள்

recent
-

ராஜீவ் கொலை: நால்வரை விடுவிக்கு இடைக்கால தடை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

ராஜீவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகத்தான் அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று மூவரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அப்போது எஞ்சிய 4 பேர் விடுதலைக்கும் மத்திய அரசு சார்பில் தடை கோரப்பட்டது. அதற்கு தனியே மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து நளினி உட்பட 4 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. 

இந்த விசாரணையின் முடிவில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்தது.
ராஜீவ் கொலை: நால்வரை விடுவிக்கு இடைக்கால தடை Reviewed by NEWMANNAR on February 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.