அண்மைய செய்திகள்

recent
-

கோபிதாஸின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது

மகசின் சிறைச்­சா­லை­யின் 'சி' பிரிவின் மல­ச­லக்­கூ­ட­மொன்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட தமிழ் அர­சியல் கைதி­யான விஸ்­வ­லிங்கம் கோபி­தாஸின் மர­ணம் ­இ­யற்­கை­யாக நிகழ்ந்­தது என பிரேத பரி­சோ­த­னையின் அறிக்­கையில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 

சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்­திற்கு நேற்று முன்­தினம் மாலை கிடைக்­கப்­பெற்ற குறித்த பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யி­னூ­டாக அந்த அர­சியல் கைதியின் மரணம் இயற்­கை­யாக நிகழ்ந்­தது என உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லைகள் திணைக்­கள ஊடகப் பேச்­சாளர் காமினி குல­துங்க தெரிவித்தார்.
 
இத­யத்­திற்கு செல்லும் குழாய் ஒன்றில் ஏற்­பட்ட சடு­தி­யான அடைப்பு கார­ண­மாக அக்­குழாய் வெடித்­த­தி­லேயே அர­சியல் கைதி­யான விஸ்­வ­லிங்கம் கோபி­தாஸின் மரணம் சம்­ப­வித்­துள்­ள­தா­கவும் இந்த மர­ண­மா­னது ஐந்து நிமி­டங்­க­ளுக்கும் குறை­வான காலப்­ப­கு­திக்குள் நிகழ்ந்­துள்­ள­தா­கவும் பிரேத பரி­சோ­தனை அறிக்கை சுட்­டிக்­காட்­டு­வ­தாக சிறைச்­சா­லைகள் திணைக்­கள ஊடகப் பேச்­சாளர் காமினி குலதுங்க மேலும் தெரிவித்தார்.
 
தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு நிதி உதவி அளித்தார் என்ற குற்­றச்­சாட்டில் கட்­டு­நா­யக்­கவில் வைத்து கைது செய்­யப்­பட்­டி­ருந்த கோபிதாஸ், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்டு ஐந்து வருட சிறைத்­தண்­டை­னையின் கீழ் மகசின் சிறைச்­சா­லையில் தண்­டனைப் பெற்று வந்த நிலையில் கடந்த திங்­கட்­கி­ழமை காலை சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருந்தார். 
 
இந்­நி­லையில் 42 வய­தான கோபி­தாஸின் மரணம் குறித்து பல்­வேறு தரப்­பி­னரும் சந்தேகங்களை தோற்றுவித்த நிலையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கை யில் அது இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது
கோபிதாஸின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது Reviewed by Author on February 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.