அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது

மன்னார் மனித புதைகுழியில் இன்றும் அகழ்வுப் பணிகள் தொடரவுள்ளன.

மனித புதைகுழியில் இருந்து இதுவரை 58 மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எலும்பு கூடுகளும், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் இதுவரை 33 எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளதுடன், அவை மன்னார் வைத்தியசாலையின் பிரத்தியேக அறையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் – மாந்தை வீதியின் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு அருகில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நீர்குழாய்களை பொருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களால் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில், அநுராதபுரம் விசேட சட்டவைத்திய அதிகாரி டி.எல். வைத்தியரட்னவின் கண்காணிப்பின் கீழ் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது Reviewed by NEWMANNAR on February 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.