அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றவர் கைது

சுற்றிவளைப்புக்குச் சென்ற கொலன்னாவை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கத்தியால் குத்தி, தப்பிச்சென்ற பிடியா
ணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குட்டிகல பொலிஸாரினால் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் பிடியாணை பிடிக்கப்பட்டவர் கைதுசெய்யப்பட்டு, கொலன்னாவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரை கைதுசெய்வதற்காக இன்று காலை சென்ற சந்தர்ப்பத்தில், வீட்டின் பின்பகுதியில் மறைந்திருந்த அவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். 

இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றவர் கைது Reviewed by NEWMANNAR on March 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.