அதிவேக நெடுஞ்சாலைப் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலி
பியகம அதிவே நெடுஞ்சாலையின் தற்காலிக பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பியகம ரஜமாவத்தைப் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்காலிகமாக கடப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பாரிய கொங்கரீட் பாலம் வீழ்ந்ததில் மூன்று தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலைப் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment