படகு விபத்தில் பெண் ஊடகவியலாளர் பலி
வவுனியா, மாமடு குளத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மூவரில் ஒருவர், இளம் பெண் ஊடகவியலாளர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளத்தை பிறப்பிடமாகவும் பட்டக்காடை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஜான்ஸி (வயது 26) என்ற பெண் ஊடகவியலாளரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர், இலங்கை இதழியல் கல்லூரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அச்சு ஊடகத்தில் கல்வி பயின்று பின், தினகரன் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் ஊடகவியாளராக பணியாற்றியுள்ளார்.
திருமணம் முடித்து நான்கு மாதங்களே ஆன நிலையில் இவர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படகு விபத்தில் பெண் ஊடகவியலாளர் பலி
Reviewed by NEWMANNAR
on
April 01, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment