இந்திய வீட்டுத்திதிட்ட பயனாளிகள் தெரிவில் தமிழ் மக்கள் அதிருப்தி -முத்தரிப்புத்துறையில் ஏற்பட்ட அச்ச நிலை வழமைக்கு திரும்பியது.
இந்திய வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவில் முத்தரிப்புதுறை மேற்கில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தில் முசலி பிரேதேச செயலாளர் நியாயமாக நடந்து கொள்ளாததால் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனர் .
தனக்கு விருப்பமானவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்திய வீட்டுத்திட்ட விதிகளுக்கு முரணாக முடிவுகளை எடுத்ததினால் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள் .
முத்தரிப்புதுறையின் கிழக்கு மேற்கு கிராம சேவையாளர்களின்முறையற்ற செயற்பாடு காரணமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட செயளாளரிடம் மகஜர் கொடுத்தும் முசலி பிரதேச செயலாளர் தனது நலனுக்காக இதுவரை இடமாற்றம் செய்யாமல் பொது மக்களை பழிவாங்குவதாக அரிப்பு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
நேற்று மாலையில் குறித்த அதிகாரி முத்தரிப்புத்துறை கிராமத்தில் வெள்ளை வாகனத்தில் ஊர் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டதால் ஊர்மக்கள் அச்சத்தில் தற்கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஆலய மணியினை ஒலிக்கவைத்து ஊர்மக்களை ஒன்றுகூட்டி பங்குத்தந்தை தலைமையில் கூட்டம் கூடி இது தொடர்பாக பிரதேச செயலாளரை அணுகி கதைப்பது என முடிவு செய்யபட்டுள்ளது .
இந்த நிகழ்வால் ஊர் மக்கள் மத்தியில் நேற்று இரவு 9.30 மணி வரை குழப்ப நிலையில் காணப்பட்டனர் .
இந்திய வீட்டுத்திதிட்ட பயனாளிகள் தெரிவில் தமிழ் மக்கள் அதிருப்தி -முத்தரிப்புத்துறையில் ஏற்பட்ட அச்ச நிலை வழமைக்கு திரும்பியது.
Reviewed by NEWMANNAR
on
April 02, 2014
Rating:

No comments:
Post a Comment