மாயமான விமானம் கிடைக்கும் என உறுதியாகக் கூற முடியாது – அவுஸ்திரேலிய பிரதமர்
காணாமல் போன எம்.எச்-370 மலேசிய விமானத்தைத் தேடுவது தான் மனித வரலாற்றில் இதுவரையான மிகப்பெரும் சவாலாக உள்ளதாக அவுஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
எனினும், அதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள படைகளுடன் கலந்துரையாடுவதற்காக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8ஆம் திகதி எம்.எச்-370 மலேசிய விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் ‘பியர்ஸ் ராஃப்’ ராணுவ விமான தளத்துக்கும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சென்றுள்ளார்.
அப்போது 8 விமானங்களும், 9 கப்பல்களும் விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. அங்குள்ள படைகளைச் சந்தித்து நஜீப் உரையாடினார்.
பின்னர் அங்கு ஊடகவியளாளர்களை சந்தித்த மலேசிய பிரதமர் “பல நாடுகளுடன் ஒன்றிணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம். தங்களின் உறவினர்களைக் காணாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு எம்மால் முடிந்த அளவு ஆறுதல் அளிக்க வேண்டும். விமானம் கிடைக்கும் வரை தேடுதல் முயற்சியைக் கைவிடப் போவது இல்லை” என கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பெர்த் கடல்பகுதியில் 1,680 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் சுமார் 2,23,000 சதுர கிலோமீட்டர் அளவில் தன்னுடைய தேடுதல் பணியை ஆஸ்திரேலியா முடுக்கிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மாயமான விமானம் கிடைக்கும் என உறுதியாகக் கூற முடியாது – அவுஸ்திரேலிய பிரதமர்
Reviewed by NEWMANNAR
on
April 04, 2014
Rating:

No comments:
Post a Comment