இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது
இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் நான்கு பேரை இந்திய கரையோர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ரண் முத்து துவ என்ற படகிலே இவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
வஜீரா என்ற இந்திய படகில் வந்த இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் இந்த படகை கைப்பற்றியுள்ளதுடன் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகும் மீன்வகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் ஒடிசா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது
Reviewed by NEWMANNAR
on
April 04, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment