ரயில் மோதி வவுனியா இளைஞன் பலி
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த ரயில் மிதி பலகையில் பயணம் செய்தவர் அதே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
மிதி பலகையில் பயணம் செய்து கொண்டிருந்தவர் தவறி விழுந்து அதே ரயிலில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெல்லாவ கனேவத்த ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா தோணிகல் என்னும் இடத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரயில் மோதி வவுனியா இளைஞன் பலி
Reviewed by NEWMANNAR
on
April 03, 2014
Rating:

No comments:
Post a Comment