மன்னாரில் அமைதியான முறையில் நோன்புப்பெருநாள் கொண்டாட்டம்-படங்கள்
முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை இன்று (29) செவ்வாய்க்கிழமை கொண்டாடி வருகின்றனர்.இதனையொட்டி மன்னார் மூர்வீதி முகைதீன் ஜீம்மாப் பள்ளிவாசலில், பேஸ் இமாம் அஸ்ஸெய்க் எஸ்.ஏ.அஸீம் மௌலவியினால் புனித ரம்ழான் நோன்பு பெருநாள் தொழுகையும்,துவா பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இத்தொழுகையின் போது விசேடமாக பலஸ்தீன் மற்றும் காஸா மக்களின் கண்ணீருக்கும் கவலைக்கும் அவர்களின் பாதுகாப்பிற்குமாக வேண்டியும் அவர்களின் ஈடேற்றத்திற்காகவும் அல்லாஹ்விடத்தில் துஆ பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு இலங்கையில் முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் நீங்கவும்,சகல இன மதங்களுக்கிடையில் ஒற்றுமையும்,அமைதியும் நிலவ விசேட துஆ பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட முஸ்ஸீம் மக்கள் அமைதியான முறையில் நோன்புப்பெருநாளை கொண்டாடினர்.
மன்னாரில் அமைதியான முறையில் நோன்புப்பெருநாள் கொண்டாட்டம்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:
No comments:
Post a Comment