அண்மைய செய்திகள்

recent
-

”யாழ் தேவி” அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் – போக்குவரத்து அமைச்சு

யாழ் தேவி ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது. வட பகுதிக்கான ரயில் மார்க்கத்தின் மீளப் புனரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் தறுவாயில் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட தாண்டிக்குளத்திற்கான யாழ் தேவியின் மார்க்க புனரமைப்பு, 2011 ஆம் ஆண்டு மே மாதம் ஓமந்தை வரை விஸ்தரிக்கப்பட்டிருந்தது. 

 அதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கிளிநொச்சிக்கும், அதனைத் தொடர்ந்து தற்போது பளை வரையும் ரயில் சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
”யாழ் தேவி” அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் – போக்குவரத்து அமைச்சு Reviewed by NEWMANNAR on July 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.