அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதத்தொகை செலுத்த உத்தரவு.

காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த உணவகம் மற்றும் பல் பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்கள் 6 பேரை தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையினை செலுத்துமாறு மன்னார் நீதவான் இன்று(28) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவகம் மற்றும் பல் பொருள் விற்பனை நிலையங்களுக்கு கடந்த 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன் டெனி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

இதன் போது பாவனைக்கு உதவாத,காலாவதியான,உற்பத்தி திகதிகள் பிரசுரிக்கப்படாத நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டதோடு அதனை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 6 உணவகம் மற்றும் பல் பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த 6 பேருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் இன்று வியாழக்கிழமை(28) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது. இதன் போது குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் 6 பேரூம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து ஒவ்வொரு வர்த்தகர்களும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தொகையினை செலுத்த நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அபராதத்தொகை செலுத்த உத்தரவு. Reviewed by NEWMANNAR on August 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.