மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஆலோசனைக்கூட்டம்.-Photo
முச்சக்கர வண்டி ஓட்டுனர்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படவுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஆலோசனைக்கூட்டம் இன்று வியாழக்கிழமை(28) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.
எதிர் வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி(27-09-2014) நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள குறித்த வேலைத்திட்டம் மன்னார் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் திணைக்கள அதிகாரிகளிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த கூட்டம் இடம் பெற்றது.
முச்சக்கர வண்டி ஓட்டுனர்களை ஒன்றிணைத்து பொலிஸ்,சுகாதார திணைக்கள அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள் மற்றும் அரச திணைக்கள பணியாளர்கள் ஒன்றினைந்து குறித்த தேசிய டெங்கு ஒழிப்பு வேளைத்திட்டத்தினை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் மேற்கொள்ளவுள்ளனர்.
இன்று(28) வியாழக்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்ற குறித்த ஆலோசனைககூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல்,மாவட்ட உதவி செயலாளர் எம்.பரமதாஸ்,பிரதேசச் செயலாளர்கள்,பிரதேச முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர்கள்,பொலிஸ் அதிகாரிகள்,திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஆலோசனைக்கூட்டம்.-Photo
Reviewed by NEWMANNAR
on
August 28, 2014
Rating:
No comments:
Post a Comment