அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளைக் கொடி எங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கவில்லை-ஆணைக்குழு முன் சாட்சியம்

“இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடையும்போது மக்கள் பலர் வெடிபட்டு இறந்ததைக் கண்டோம். வெள்ளைக் கொடி எங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கவில்லை” – என்று ஆணைக்குழு முன்பாக அடம்பனைச் சேர்ந்த ஒருவர் நேற்றுச் சாட் சியமளித்தார்.

 காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் விடயப் பரப்புக்கள் விரிவாக்கப் பட்டதற்கு அமைய, இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனிதாபிமானச் சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் ஆணைக்குழுவினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

 காணாமற்போன உறவுகள் தொடர்பில் சாட்சியமளித்த மேற்படி நபரிடம், நீங்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்த முகாம்களின் மேலே வெள்ளைக் கொடி கட்டியிருக்கவில்லையா? என்று ஆணைக்குழுவினர் கேட்டதற்கு, கட்டியிருந்தும் அதனால் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டார். வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் போனபோது பாதுகாப்பாக இருந்ததா? என்று ஆணைக்குழுவினர் மீண்டும் கேட்க, எங்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு. 

இவ்வாறு சென்றவர்கள் பலர் வெடிபட்டு உயிரிழந்ததைக் கண்டேன். வெள்ளைக் கொடி பாதுகாப்பாக இருக்கவில்லை. அது எங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை” – என்றார்.
வெள்ளைக் கொடி எங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கவில்லை-ஆணைக்குழு முன் சாட்சியம் Reviewed by NEWMANNAR on August 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.