மோட்டார் சைக்கிள் திருனை மடக்கி பிடித்த பொதுமக்கள்
அக்கரைப்பற்று இசங்காணிசீமை எனும் இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை திருடி செல்ல ஆயத்தமான திருடனை பொதுமக்கள் சேர்ந்து மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் இன்று காலை இசங்காணிசீமை எனும் பிரதேசத்துக்கு சென்று அங்கு வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு திறப்பும் மோட்டார் சைக்கிளில் இருக்க அருகில் இருந்த வீடொன்றிற்கு சென்று அங்கு பேசிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் ஏறியிருப்பதை கண்டு ஓடி வந்த போது திருடன் மோட்டார் சைக்கிளை ஸ்ராட் எடுத்து ஓட முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை இழுத்து பிடித்து கூக்குரல் இட்ட போது அருகில் உள்ள பொதுமக்கள் சேர்ந்து திருடனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர் தீகவாபி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் திருனை மடக்கி பிடித்த பொதுமக்கள்
Reviewed by NEWMANNAR
on
August 15, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment