மன்னாரில் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் துறையிடம் ஒப்படைப்பு.
இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை (15) விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களும் இன்று(16) சனிக்கிழமை தலைமன்னார் கடற்படையூடாக இந்திய கடலோரக் காவல் துறையிடம் ஒபபடைக்கப்பட்டுள்ளர்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி 4 படகுகளில் தலைமன்னார் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை கைது செய்த கடற்படையினர் விசாரனைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து குறித்த மீனவர்களின் விடுதலை தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த 20 மீனவர்களும் இந்திய சுதந்திர தினமான நேற்று வெள்ளிக்கிழமை(15) மடு சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை விடுதலை செய்தார்.
இந்த நிலையில் குறித்த 20 இந்திய மீனவர்களும் பேசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் இன்று(16) காலை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்படையினரின் படகுகளில் குறித்த மீனவர்கள் ஏற்றப்பட்டு இந்திய கடலோரக்காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் துறையிடம் ஒப்படைப்பு.
Reviewed by NEWMANNAR
on
August 16, 2014
Rating:

No comments:
Post a Comment