பரீட்சை வினாத்தாளை விற்பனை செய்த ஊழியர் பணி நீக்கம்
இரண்டாந் தவணையின் போது பரீட்சை வினாத்தாளை 3500 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ள பாடசாலை ஊழியர் ஒருவர் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கிணங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை கல்வி வலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் ஆராய்வதற்கென முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மூவர டங்கிய குழுவொன்றை நியமித் திருந்தார்.
இக்குழுவின் பரிந்துரைக்கமைய மேற்படி ஊழியர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கடந்த 2ம் தவணைப் பரீட்சையின் போது விஞ்ஞானம்,
சிங்களம் மற்றும் இலக்கியம் உட்பட மூன்று வினாப்பத்திரங்களை தனியார் வகுப்புக்களை நடத்துகின்ற ஆசிரியர்களுக்கு மேற்படி ஊழியர் 3500 ரூபாவிற்கு விற் பனை செய்தமை தெரியவந்தது.
பரீட்சை வினாத்தாளை விற்பனை செய்த ஊழியர் பணி நீக்கம்
Reviewed by NEWMANNAR
on
August 27, 2014
Rating:

No comments:
Post a Comment