அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாழையின் பலன்கள்

முக்­க­னி­களில் ஒன்­றான வாழைப்­பழம் பல்­வேறு உயிர்­ சத்­துக்­க­ளையும், கனி­மங்­க­ளையும் கொண்­டுள்­ளது. இதில் சுண்­ணாம்­புச்­சத்து அதிகளவு உள்­ளது. மேலும் “ப்ரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ்‘ ஆகிய மூன்று வித சர்க்­க­ரைகள் உள்­ளன. ஒரே உணவில் இவை கிடைப்­பது மிக அபூர்­வ­மா­னது. உட­லுக்கு அவ­சிய தேவை­யான நார்ச்­சத்து, புர­தச்­சத்து போன்ற முக்­கி­ய­மான சத்­துக்­க­ளையும் வாழைப்­பழம் தன்னுள் கொண்­டுள்­ளது. 

வாழைப்­பழம் உணவை எளிதில் ஜீர­ண­மாக்கும் ஆற்றல் உள்­ளது. பித்­தத்தை நீக்கும். உட­லுக்கு வலுவும், எடையை அதி­க­ரிக்கும் ஆற்­றலும் கொண்­டது. இரத்த ஓட்­டத்தை அதி­க­ரிக்கும். மலச்­சிக்­கலை போக்கும். குடலில் புண்­ணையும் ஆற்றும். கடும் பணியின் கார­ண­மாக ஏற்­படும் சோர்வை நீக்கும் ஆற்றல் கொண்­டது வாழைப்­பழம். சோர்­வாக இருக்­கும்­போது ஒரு வாழைப்­ப­ழத்தை சாப்­பிட்டால் சுறு­சு­றுப்பு தானாக வந்­து­விடும். அதன்பின், மீண்டும் சில மணி நேரம் வேலை செய்­யலாம். 

வாழைப்­ப­ழத்தில் உள்ள, “ட்ரைப்­டோபன், செர­டோனின்" ஆகிய இரசா­யன சத்­துக்­கள்தான் இதற்கு காரணம். பக்­க­வாதம் வராமல் தடுக்க வாழைப்­பழம் பெரிதும் உத­வு­கி­றது. வாழைப்­ப­ழத்தில் சர்க்­கரை அளவு குறைவு பொட்­டா­சியம் சத்து அதிகம். அதனால், இரத்த அழுத்­தத்தை முற்­றிலும் தடுத்து விடும். வாழைப்­ப­ழத்தில், ‘விட்­டமின் பி 6’ உள்­ளது. இரத்­தத்தில் உள்ள சர்க்­கரை அளவை சீராக்­கு­வது இதுதான். வாழைப்­ப­ழத்தில், “ஆன்­டாசிட் என்னும் இரசா­ய­னமும் உள்­ளதால், உணவு சாப்­பிட்ட பின் சில­ருக்கு ஏற்­படும் நெஞ்­செ­ரிச்­சலை சுல­ப­மாக போக்கி விடு­கி­றது. 

வாழைப்­ப­ழத்தில், இரும்­புச்­சத்து உள்­ளது. இரத்­தத்தில் ஹீமோ­கு­ளோபின் சத்து இல்­லா­த­தால்தான் இரத்­த­ சோகை ஏற்­ப­டு­கி­றது. இரத்தச்சோகை உள்­ள­வர்கள், வாழைப்­பழம் சாப்­பிட்டு வந்தால் இரத்­தச்­சோகை விலகும். ஆண்மை குறையை நீக்கும், ­ கண் பார்­வையால் பாதிக்­கப்­ப ட்­டுள்­ள­வர்­க­ளுக்கு செவ்­வாழை சிறந்த நிவா­ர­ணி­யாகும். கண் பார்வை குறைய ஆரம்­பித்­த­வுடன் தின­சரி ஒரு செவ்­வாழை பழத்தை சாப்­பிட பார்வை தெளி­வ­டையும். மாலைக்கண் நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் இரவு உண­வுக்கு பிறகு 40 நாட்கள் தொடர்ந்து செவ்­வாழை பழத்தை சாப்­பிட்டு வந்தால் இதற்கு பலன் கிடைக்கும்.

 நரம்பு தளர்ச்சி ஏற்­பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறை­பாடு ஏற்­படும். எனவே நரம்பு தளர்ச்­சியால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.
செவ்வாழையின் பலன்கள் Reviewed by NEWMANNAR on August 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.