பேஸ்புக்கில் மன்னராட்சியை விமர்சித்த பாடகருக்கு 15 ஆண்டுகள் சிறை
பேஸ்புக்கில் மன்னராட்சி பற்றிய விமர்சித்தமைக்காக, தாய்லாந்து பாடகர் ஒருவருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மன்னராட்சியே நடைபெற்று வருகிறது.
அந்நாட்டு சட்டப்படி மன்னரையோ அவரது குடும்பத்தினரையோ அவமதித்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்நிலையில், தாய்லாந்து பாடகர் ஒருவர் 2010, 2011ஆம் ஆண்டுகளில் மன்னராட்சியை விமர்சித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில், குறித்த பாடகருக்கு மன்னராட்சியை அவமதித்ததற்காக 15 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் மன்னராட்சியை விமர்சித்த பாடகருக்கு 15 ஆண்டுகள் சிறை
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:


No comments:
Post a Comment