யாழ். புத்தூர் பஸ் விபத்து; சாரதி கைது
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு பஸ் ஒன்று குடைச்சாய்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மானிப்பாயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே நேற்றிரவு 7.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த மார்க்கத்தில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதி பத்திரமின்றி பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறுக்கு வீதியில் பயணித்த போதே பஸ் குடைசாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். புத்தூர் பஸ் விபத்து; சாரதி கைது
Reviewed by NEWMANNAR
on
September 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 09, 2014
Rating:


No comments:
Post a Comment