மடு பிரதேச செயலக கிராமங்களுக்கு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரின் நிதியுதவியின் கீழ் தெருவிளக்குகள்.-Photo
வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நிதியின் வேலைத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மடு பிரதேசத்தில் சூரிய சக்தி தெருவிளக்குகள் நேற்று வெள்ளிக்கிழமை காலை அமைச்சரினால் உத்தியோக பூர்வமாக திறந்து மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். வரப்பிரகாசம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.பீட்டர்,எம்.ராசசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் மின்சாரம் இன்னமும் செல்லாத கிராமங்களான தட்சனா மருதமடு, கீரி சுட்டான், முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் எனபதும் குறிப்பிடத்தக்கது.
மடு பிரதேச செயலக கிராமங்களுக்கு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரின் நிதியுதவியின் கீழ் தெருவிளக்குகள்.-Photo
Reviewed by NEWMANNAR
on
October 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 04, 2014
Rating:








No comments:
Post a Comment