மனதில் இருந்து ஊற்றெடுக்கும் உணர்வு சார்ந்த போராட்டங்களை எத்தனை படைகள் சூழ்ந்தாலும் தோற்கடிக்க முடியாது-எஸ்.வினோ நோகராதலிங்கம்.
மாவீரர் தினத்தை நினைவு கூர்வது தமிழ் மக்களை விடவும்,பெரும்பான்மை சிங்கள மக்களும்,படைத்தரப்புமே என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
வட கிழக்கில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புத்தரப்பினர் இதற்கு வித்திடுகின்றனர்.சில வேளைகளில் தமிழ் மக்கள் இவ்விடையங்களை மறந்து போயிருந்தாலும்,உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி மாவீரர்களை நினைவு கொள்ளச் செய்வது பாதுகாப்புப் படையினரே.
ஆனால் அவர்கள் பயத்தில் நினைவு கூறுகின்றார்கள்.எமது மக்கள் பக்தியில் நினைவு கூறுகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் கடந்த சில நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வீட்டுக்கதவுகளில் அவர்களை எச்சரிக்கை விடுக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகின்றது.
இதே போன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் அச்சுரூத்தப்பட்டு வருகின்றனர்.
இது போன்ற அனாமதேய செயல்களில் ஈடுபடுவோர் இவற்றை நிறுத்தி எமது மக்களினதும்,மாணவர்களினதும்,சுமூக வாழ்விற்கும்,கற்றல் நடவடிக்கைகளுக்கும் வழிவிடல் வேண்டும்.
ஆச்சுறுத்தல்களினால் அடி பணிய வைக்க முனைந்தால் அவர்களுக்கு நாம் தோல்வியை கொடுக்க வேண்டும்.தமிழ் தேசியத்திற்காகவும்,தமிழ் மக்களின் உரிமைக்காகவும் கடந்த காலங்களில் ஒவ்வொரு தமிழனும் போராடி இருக்கின்றான்.
ஆயுதப்போராட்டம் தோற்று போயிருக்கலாம்.அதே போல் அகிம்சை போராட்டமும் நசுக்கப்படலாம்.
ஆனால் ஆழ் மனதில் இருந்து ஊற்றெடுக்கும் உணர்வு சார்ந்த போராட்டங்களை எத்தனை படைகள் சூழ்ந்தாலும் தோற்கடிக்க முடியாது.இது இரத்தத்திலும்,சதையிலும்,நாடி நரம்புகளிலும் உரமாகி போய் விட்டுள்ளது.எனவே இந்த நாட்களில் எமது மக்கள் விழிப்பாகவும் 'ஆத்மார்த்த' உணர்வோடும் ஒவ்வெவொரு கருமத்தையும் ஈடேற்ற வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மனதில் இருந்து ஊற்றெடுக்கும் உணர்வு சார்ந்த போராட்டங்களை எத்தனை படைகள் சூழ்ந்தாலும் தோற்கடிக்க முடியாது-எஸ்.வினோ நோகராதலிங்கம்.
Reviewed by NEWMANNAR
on
November 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 26, 2014
Rating:
%2B(1).jpg)

No comments:
Post a Comment