வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்கின் வாகனம் மீது தாக்குதல்-Photos
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்கின் வாகனம் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொரல்லை, கோட்டா வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இன்று(7-12-2014) மாலை சுமார் 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்கின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சுமார் 11 பேர் கொண்ட குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவத்தின் போது அவர் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன விற்கு ஆதரவு வழங்குவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் அண்மையில் விலகியமை குறிப்பிடத்தக்கது...
இச்சம்பவம் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது தனது வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்கின் வாகனம் மீது தாக்குதல்-Photos
Reviewed by NEWMANNAR
on
December 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 08, 2014
Rating:






No comments:
Post a Comment