அண்மைய செய்திகள்

recent
-

நாட்டை மீட்டெடுக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் – சந்திரிக்கா குமாரதுங்க

பாதாளத்தில் தற்போது விழுந்துள்ள நாட்டை மீட்பதற்கு நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை போன்று, பொது மக்களும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

எனது தந்தை, தாய் மற்றும் எனது காலப்பகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சமாதானமாக வாழ்ந்தனர். ஆனால் கடந்த ஓரிரு வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து புதிதாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை. யுத்தத்தை வெற்றிக் கொண்டதாக கூறி நாட்டில் உள்ள அனைத்து வளங்களும் இன்று சூறையாடப்படுகின்றன. அடிமட்டம் வரை சூறையாடியுள்ளனர். இந்த சொல்லிற்காக என்னை மன்னியுங்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சி என இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அனைவரினதும் அரசாங்கம் ஒன்றை அமைக்கவே கூடியுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அர்ஜூன ரணதுங்க பொறுப்பேற்றுள்ளார். இவரை விட சிறந்த ஒருவரை அத்தனகல்லவிற்கு தெரிவு செய்ய முடியாது.
நாட்டை மீட்டெடுக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் – சந்திரிக்கா குமாரதுங்க Reviewed by NEWMANNAR on December 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.