அண்மைய செய்திகள்

recent
-

இருபத்து நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை செல்கிறது ரயில்


கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கான ரயில் போக்குவரத்து 24 வருடங்களின் பின்னர் இன்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை நாளாந்தம் நகர்சேர் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேபோன்று, யாழ்தேவி மற்றும் இரவுநேர தபால் ரயில்கள் சுன்னாகம் வரை போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

இருபத்து நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை செல்கிறது ரயில் Reviewed by NEWMANNAR on January 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.