அண்மைய செய்திகள்

recent
-

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று பொறுப்பேற்றனர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றனர்.

பொது அமைதி, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகாரம் தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொது அமைதி தொடர்பான அமைச்சராக இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய அமைச்சருக்கு இதன்போது பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர் சர்வமத அனுஷ்டானங்களின் பின்னர் அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதேவேளை, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மகளிர் விவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற சர்வமத அனுஷ்டானங்களின் பின்னர் விஜயகலா மகேஸ்வரன் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக பி.திகாம்பரம் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று பொறுப்பேற்றனர் Reviewed by NEWMANNAR on January 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.