அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரியைப் போன்று எளிமையான மனிதரை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை : பரிசுத்த பாப்பரசர்


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை போன்ற எளி­மை­யான மனி­தரை தான் வாழ்க்­கையில் சந்­தித்­த­தில்லை எனத் தெரி­வித்­துள்ள பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்சிஸ் திருத்­தந்தை,ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால மீது தமக்கு புது­மை­யான அன்பும், கௌர­வமும் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­தி­ருப்­ப­தா­கவும் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்­துள்ளார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நடை­பெற்ற விசேட சந்­திப்­பொன்­றி­லேயே கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இதனைத் தெரி­வித்­துள்ளார்.

பாப்­ப­ர­சரை வர­வேற்­ப­தற்­காக நடத்­தப்­பட்ட விழாக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயல்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு நன்றி செலுத்­து­வ­தற்­காக வெளி­வி­வ­கார அமைச்சில் விசேட கூட்­ட­மொன்று நடை­பெற்­றது.

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகி­யோரின் தலை­மையில் இந்தக் கூட்டம் நடை­பெற்­றது. இலங்­கைக்கு பய­ணித்­ததில் தாம் பெரு­ம­கிழ்ச்­சி­ய­டைந்­த­தாக பரி­சுத்த பாப்­ப­ரசர் தன்­னிடம் தெரி­வித்­த­தாக மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

உலகில் பல நாடு­க­ளுக்கு தான் பயணம் செய்­துள்­ள­தா­கவும், அரச தலை­வர்கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான முக்­கி­யஸ்­தர்­களைச் சந்­தித்­துள்­ள­தா­கவும், எனினும், மைத்­தி­ரியைப் போல் ஒரு அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை எனவும் பரிசுத்த பாப்பரசர் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறினார்.
மைத்திரியைப் போன்று எளிமையான மனிதரை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை : பரிசுத்த பாப்பரசர் Reviewed by NEWMANNAR on January 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.