வருமான வரி செலுத்தப்படாமல் மூடப்பட்ட மன்னார் பொது சேவைகள் கழகம்.
மன்னார் அரச சேவையாளர் பொது சேவைகள் கழகம் வரி செலுத்தப்படாமல் இழுத்து மூடப்பட்டுள்ளதாக குறித்த பொது சேவைகள் கழக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருட காலமாக சீராக இயங்கி வந்த பொது சேவைகள் கழகம் திடீர் என கடந்த முதலாம் திகதி முதல் இழுத்து மூடப்பட்டுள்ளமையினால் அங்கத்தவர்கள் பெரிதும் பாதீக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் அரச பொது சேவைகள் கழக செயலாளரிடம் கேட்ட போது,,
குறித்த பொது சேவைகள் கழகம் கடந்த பல வருடங்களாக மதுபான சாலையாகவே இயங்கி வந்தது.தற்பொழுது எமது அரசாங்க அதிபரின் தலையீட்டினால் பொது கூட்டம் கூட்டப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு மன்னார் அரச சேவையாளர் பொது சேவைகள் கழகம் புதிய நிர்வாகத்திடம் வெகு சிறப்பாக இயங்கி வந்தமை யாவரும் அறிந்த விடையம்.
இருப்பினும் கடந்த நிர்வாக காலத்தில் பொது சேவைகள் கழகத்தின் செயலாளராக கடமையாற்றிய ஓய்வு பெற்ற கிராம அலுவலகர் ஜே.ஜே.மிராண்டா தனது காலப்பகுதியான 2013 மார்ச் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுமார் 55 மில்லியன் ரூபாய் பெறுமதியான மதுபானங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்துள்ளார்.
கொள்வனவு செய்யப்பட்ட 55 மில்லியன் ரூபாய் பெறுமதியான மதுபானங்களுக்கான வருமான வரியும்,பெறுமதி சேர் வரியும் செலுத்தாமையினால் இவ் வருடத்திற்குரிய உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இவ்விடையம் தொடர்பாக அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதுடன் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முன்னால் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வருமான வரி செலுத்தப்படாமல் மூடப்பட்ட மன்னார் பொது சேவைகள் கழகம்.
Reviewed by NEWMANNAR
on
January 23, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 23, 2015
Rating:


No comments:
Post a Comment