13 கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல்
13 கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
சுங்கப் பிரிவினரின் பொறுப்பில் இருந்த சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றினுள் இருந்து இந்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சலவைத் தூள் இறக்குமதி செய்யும் போர்வையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்ததாக சுங்கப் பேச்சாளரும் சுங்க சட்டப் பிரிவின் பணிப்பாளருமான லெஸ்லி காமினி கூறியுள்ளார்.
குறித்த கொள்கலனுக்குள் இருந்து 44 ஆயிரம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
13 கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல்
Reviewed by NEWMANNAR
on
January 19, 2015
Rating:

No comments:
Post a Comment