அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வரம்-யாழ் பிரதான வீதியில் உள்ள அம்மன் கோவில் உடைப்பு.-Video



மன்னார் திருக்கேதீஸ்வரம்-யாழ் பிரதான வீதியில் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் பல வருடங்களாக காணப்பட்ட அம்மன் கோவில் இனம் தெரியாத நபர்களினால் நேற்று(24) செவ்வாய்க்கிழமை இரவு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த காணியின் உரிமையாளர் தெரிவித்தார்.


குறித்த காணியில் யுத்தத்திற்கு முன் சிறிய அம்மன் கோவில் காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் குறித்த கோவிலில் வழிபட்டு வந்துள்ளனர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.பின் மீண்டும் யுத்தம் முடிவடைந்த நிலையில் மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பினர்.

இதன் போது குறித்த காணியில் உள்ள அம்மன் கோவில்; மீண்டும் புதிப்பிக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையிலே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதிக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் தகரங்களினால் அமைக்கப்பட்ட அம்மன் கோவிலை உடைத்துச் சென்றுள்ளதாக குறித்த அம்மன் கோவில் அமைந்துள்ள காணியின் உரிமையாளர் தெரிவித்தார்.



மன்னார் திருக்கேதீஸ்வரம்-யாழ் பிரதான வீதியில் உள்ள அம்மன் கோவில் உடைப்பு.-Video Reviewed by NEWMANNAR on February 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.