யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதி
யாழ் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவதற்காக நேற்று முதல் இணையத்தள வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில் திணைக்களத்தின் வணிக அத்தியட்சகர் டி.டப்ளியூ. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
இணையத்தள வசதிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன கலந்து கொண்டார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ரயில் திணைக்களத்தின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 100 ரயில் நிலையங்களில் வைபை இணைய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என சிசிர குமார தெரிவித்துள்ளார்.
யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதி
Reviewed by NEWMANNAR
on
February 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 26, 2015
Rating:


No comments:
Post a Comment