மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 16 ஆவது பொதுக்கூட்டம்.-Photos
மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 16 ஆவது பொதுக்கூட்டம் ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் தலைவர் வைத்தியர் செல்வ மகேந்திரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை(12) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
குறித்த பொதுக்கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,கௌரவ விருந்திரனர்கலாக ஓய்வு பெற்ற நானாட்டான் பிரதேசச் செயலாளர் சந்திரையா,வைத்தியர் கதிர்காமநாதன், மன்னார் மாவட்ட ஆயர்வேத பாதுகாப்புச் சபையின் செயலாளர் சித்த வைத்தியர் டி.பத்திமன்,பொருளாளர் சித்த வைத்தியர் எஸ்.லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கௌரவ விருந்தினர்கள்,மூத்த சுதேச மருத்துவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியில் புதிய நிர்வாக தெரிவுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 16 ஆவது பொதுக்கூட்டம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 12, 2015
Rating:
No comments:
Post a Comment