அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும்-அக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று(14) சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆஹாஸ் விடுத்தியில் இடம் பெற்றது.

-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளரும்,சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாறுக் தலைமையில் குறித்த சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

-குறித்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

-இதன் போது மன்னார் மாவட்டத்தில் அரசியல் ரீதியாக இடம் பெற்று வரும் தொடர்ச்சியான தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து ஆதரவாளர்கள் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு வேளை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.





மன்னாரில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும்-அக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு. Reviewed by NEWMANNAR on March 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.