சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வேஷ்டி,சால்வைகளை வழங்கி வைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்...-Photos
பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் இந்துக்களுக்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேற்று(12) ஞாயிற்றுக்கிழமை மாலை சித்திரைப் புத்தாண்டு சிறப்பு பரிசாக வேஷ்டி சால்வைகள் வழங்கி வைத்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம், செல்வநகர், தோட்டக்காடு ஆகிய கிராம மக்களுக்கு இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் திருக்கேதீஸ்வர பிரதம குரு கண்ணன் குருக்கள் அவர்களும், புலவர் ஐயா அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வேஷ்டி,சால்வைகளை வழங்கி வைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்...-Photos
Reviewed by NEWMANNAR
on
April 13, 2015
Rating:

No comments:
Post a Comment